Thursday 3 April 2014

கவிதைகள்


                

        கவிதைகள்

* படிக்காத அம்மாவின்  கையெழுத்து ஓவியமாய்!
    வாசலில் கோலம்!!
* இன்று சம்பள நாள்...
    வருத்தத்துடன் குடிகாரனின் குடும்பம்!
* மகளுக்கு மறுபடியும் பெண்குழந்தை பிறந்திருக்கிறதே
   என்று மிகவும் கவலைப்பட்டாள்...
   மகனால் கொடுமைப்படுத்தப்பட்டு, மகளிடம் வந்து
   சேர்ந்த தாய்
* தன்னைப்போல்  முதியோர்இல்லத்துக்கு வரவே
   கூடாது தன்மகன், என்று வேண்டிக்கொண்டார் தந்தை..!
   பிள்ளைப்பாசத்தில் தான் தவித்தபோதெல்லாம்..!
* எச்சில் கையால் காக்கையை ஓட்டாதவர், காக்கையைக்
   கூப்பிட்டுச்சோறு வைத்தார்.. அன்று அமாவாசை!

No comments:

Post a Comment

Total Pageviews