கவிதைகள்
* படிக்காத அம்மாவின் கையெழுத்து ஓவியமாய்!
வாசலில் கோலம்!!
* இன்று சம்பள
நாள்...
வருத்தத்துடன் குடிகாரனின் குடும்பம்!
* மகளுக்கு மறுபடியும் பெண்குழந்தை
பிறந்திருக்கிறதே
என்று மிகவும் கவலைப்பட்டாள்...
மகனால் கொடுமைப்படுத்தப்பட்டு, மகளிடம் வந்து
சேர்ந்த ’தாய்’
* தன்னைப்போல் முதியோர்இல்லத்துக்கு வரவே
கூடாது தன்மகன், என்று வேண்டிக்கொண்டார் தந்தை..!
பிள்ளைப்பாசத்தில் தான் தவித்தபோதெல்லாம்..!
* எச்சில் கையால் காக்கையை
ஓட்டாதவர், காக்கையைக்
கூப்பிட்டுச்சோறு வைத்தார்.. அன்று அமாவாசை!
No comments:
Post a Comment