Thursday 10 April 2014

இளமையிலே தியானம்

                 இளமையிலேயே தியானம் பழகுவோம்

* உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்திநிலை உள்ளது.
  அந்த சக்திநிலையை மேம்படுத்துவதற்காகத்தான் யோகா,
  தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன.

* மனிதன் தன் மூலத்தை உணர்வதற்காகவேதான் இந்த
  மேம்பாட்டுப்பயிற்சிமுறைகள்உதவுகின்றன.உள்நிலையில் 
  கவனம்செலுத்தி, உ(ய)ரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.

* யோகா என்பது ஒரு தொழில்நுட்பம். விழிப்புணர்விற்கானவழிகாட்டி.    
  உள்நிலை நலவாழ்விற்கான ஒரு தொழில்நுட்பமாக யோகா 
  விளங்குகிறது. மனிதன் தன் வாழ்வை (விழிப்புணர்வோடும்,          புரிதலோடும்) முழுமையாக வாழஉதவும் தொழில்நுட்பமே யோகா.   

* யோகா, தியானம் இவற்றை இளவயதிலேயே கற்றுக்கொண்டு     தொடர்ந்தால், சீரான  உடல்வளர்ச்சியும், மனமுதிர்ச்சியும்பெற்று,         முதிர்காலங்களில் ஏற்படும் பலவகையான இன்னல்களைத்               தவிர்க்கலாம். இதுவே விளைவறிந்தவிழிப்பாகும்.
                
   * நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை *  

No comments:

Post a Comment

Total Pageviews