இளமையிலேயே தியானம் பழகுவோம்
* உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்திநிலை உள்ளது.
அந்த சக்திநிலையை மேம்படுத்துவதற்காகத்தான் யோகா,
தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன.
* மனிதன் தன் மூலத்தை உணர்வதற்காகவேதான் இந்த
மேம்பாட்டுப்பயிற்சிமுறைகள்உதவுகின்றன.உள்நிலையில்
கவனம்செலுத்தி, உ(ய)ரிய மாற்றங்களை
ஏற்படுத்தமுடியும்.
* யோகா என்பது ஒரு
தொழில்நுட்பம். விழிப்புணர்விற்கானவழிகாட்டி.
உள்நிலை
நலவாழ்விற்கான ஒரு தொழில்நுட்பமாக யோகா
விளங்குகிறது. மனிதன் தன் வாழ்வை (விழிப்புணர்வோடும், புரிதலோடும்) முழுமையாக வாழஉதவும் தொழில்நுட்பமே யோகா.
* யோகா, தியானம் இவற்றை இளவயதிலேயே கற்றுக்கொண்டு தொடர்ந்தால், சீரான உடல்வளர்ச்சியும், மனமுதிர்ச்சியும்பெற்று, முதிர்காலங்களில் ஏற்படும் பலவகையான இன்னல்களைத் தவிர்க்கலாம். இதுவே விளைவறிந்தவிழிப்பாகும்.
* நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை *
No comments:
Post a Comment