Saturday 5 April 2014

அர்த்தங்கள்

                       

       அர்த்தங்கள்
* உனது மவுனத்தில் எடுத்துக்கொள்கிறேன்
    என் கவிதைக்கான சொற்களை.
* சிங்கத்தின் குகைக்கே சென்றுமோதுவது என்பது
   என்னவென்றால், மனைவியின் சமையலைச்
   சாப்பிட்டுக்கொண்டே அம்மாவின் சமையலைப்
   புகழ்வதுதான்!
* எந்தமனிதனையும் ஒதுக்காதே; அவனிடமிருந்தும்
   நீ கற்றுக்கொள்ள ஏதாவதொன்று இருக்கவேசெய்யும்.
* கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒருஉண்மை,
   ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்.
* அனுபவத்தின் முக்கிய அம்சம், பழையமுட்டாள்தனங்களைக்
    களைவதுதான்.
* எப்படிச்சிந்திக்கிறாய் என்பதில்தான், புதிய கருத்துக்கள்
    உருவாகின்றன.

No comments:

Post a Comment

Total Pageviews