அர்த்தங்கள்
* உனது மவுனத்தில்
எடுத்துக்கொள்கிறேன்
என் கவிதைக்கான சொற்களை.
* சிங்கத்தின் குகைக்கே
சென்றுமோதுவது என்பது
என்னவென்றால், மனைவியின் சமையலைச்
சாப்பிட்டுக்கொண்டே அம்மாவின் சமையலைப்
புகழ்வதுதான்!
* எந்தமனிதனையும் ஒதுக்காதே; அவனிடமிருந்தும்
நீ
கற்றுக்கொள்ள ஏதாவதொன்று இருக்கவேசெய்யும்.
* கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும்
ஒருஉண்மை,
ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்.
* அனுபவத்தின் முக்கிய அம்சம், பழையமுட்டாள்தனங்களைக்
களைவதுதான்.
* எப்படிச்சிந்திக்கிறாய் என்பதில்தான், புதிய கருத்துக்கள்
உருவாகின்றன.
No comments:
Post a Comment