கவி
* `` கடந்தகாலச்செருப்புகளைக்கழற்றி எறிவோம்.
எதிர்காலச்சிறகுகளைச்சேகரிப்போம்.
நம்பிக்கை நார்மட்டும் நம்கையில் இருந்தால்
உதிந்த பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து
ஒட்டிக்கொள்ளும்.
கழுத்துமாலையாகவும் தன்னைத்தானே
கட்டிக்கொள்ளும்.
நட! இன்று மட்டும் அல்ல!
நாளை மட்டும் அல்ல! வெற்றிதேவதை உனது
விலாசத்தை
விசாரிக்கத்தொடங்கும் தொடங்கும்வரை நட!
தூங்கிவிழுந்தால் பூமி படுக்கையாகிறது.
விழித்துநடந்தால் அதுவே உனக்குப்பாதையாகிறது!
காத்திருக்கும்வரை நம் பெயர் காற்றென்றே
இருக்கட்டும்!
புறப்பட்டுவிட்டால் புயலென்று புரியவைப்போம்! ''
No comments:
Post a Comment