ஆய்வு
* ``கோபம்
என்பதை அலசுவோம். எனக்குக்கோபம்
வருகிறது. கோபத்தைத்தவிர்க்க வேண்டும் என்ற
எண்ணம் எழுகின்றது. அதாவது, நான் இப்போது
இருக்கும் நிலையிலிருந்து, நான் எப்படி ஆக
வேண்டும் என்ற ஆசையின் நிலைக்கு. இது எளிதாக
முடிகிறதில்லை. உடனே ஒரு பெரும்போராட்டம்
விளைகிறது. கோபத்தை அடக்கப்பார்க்கிறோம்.
அடக்குவது, விடுபடுவது ஆகாது என்பதை நாம்
உணர்வதில்லை. முதலில் இந்தக்கோபம் ஏன்
எனக்கு வந்தது என்பதை கவனித்தால், பிறர்செய்கை
எனக்கு ஏற்படுத்தும் பாதிப்புதானே அது. பாதிப்பு
என்பதை ஏற்படுத்திக்கொண்டது நான்தானே. ஆகவே
கோபத்திற்குக்காரணம் பிறர் அல்லர். நாமே! இதைப்
புரிந்து கொண்டுவிட்டால், கோபம் மறைந்துவிடும்.’’
- சுவாமி பிரேம்பதஞ்சலி -
No comments:
Post a Comment