தெரிஞ்சுக்குவோமா
* ஆக்ஸிஜன்
இல்லாமல் ஒரு மனிதன், சிலநிமிடங்கள்மட்டுமே
உயிர்வாழமுடியும்.
காரணம், ஆக்ஸிஜன் இல்லாமல்
மனிதமூளையால் செயல்படமுடியாது.
நாம் சுவாசிக்கும்போது உள்ளேசெல்லும்
ஆக்ஸிஜனில், சுமார் 20
சதவீதம் ஆக்ஸிஜனை நமதுமூளையே பயன்படுத்துகிறது.
சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு
ஆக்சிஜன்
கிடைக்காமல்போனாலும்,
மனிதன் உணர்வற்றநிலைக்குத்
தள்ளப்படுவான்.
அடுத்தசிலநொடிகளில் மூளையின்செல்கள்
இறந்து, மனிதன்
மரணநிலைக்குத்தள்ளப்படுகிறான். இருப்பினும்
மிகக்குறைந்த
வெப்பநிலையில் மனிதமூளைக்கு மிகக்குறைந்த
ஆக்ஸிஜன் போதுமானது. காரணம், மிகக்குறைந்த வெப்பநிலையில்
மூளையானது மிகக்குறைந்த
ஆக்ஸிஜனையே உபயோகிக்கிறது.
மனிதமூளையைத்தவிர மற்ற உறுப்புகள், ஆக்ஸிஜன் இல்லாமலும்
சிலமணிநேரங்கள் செயல்படுகின்றன.
எனவேதான், இறந்த மனிதனது மூளையைத்தவிர,
மற்றசில
உறுப்புகள் உறுப்புமாற்று சிகிச்சைக்குப்பயன்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment