பால் பரிபூரண உணவா?
* மாட்டுப்பால் சத்தான உணவு, நல்ல உணவு, பரிபூரண உணவு
என பல வருடங்களாக, பல தலைமுறைகளாக சிபாரிசு
செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும்
அடிப்படைத்தேவையாகவும் சிபாரிசு செய்யப்படுகிறது.
எல்லோருடைய உணவிலும் ஓர் அங்கமாக காலங்காலமாய்
இருக்கிறது. பால் பரிபூரண உணவு எனில் மனிதகுலம் ஏன்
நோயினால் அவதிப்படவேண்டும்? தீராத நோயினால் மாத்திரையே
கதி என்ற இழிநிலை ஏன்? மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும்
நோய்களின் பிடியில் இருந்து பூரண விடுதலை பெற இயலாதது ஏன்?
பால் பரிபூரண உணவென்றால் பரம்பரை பரம்பரையாக அதைச்சாப்பிட்டும்,
நாட்பட்ட பல வியாதிகள் பட்டியலில் இடம்பெறக்காரணம் என்ன?
எது உண்மை? ஆய்வோம், அறிவோம், உணர்வோம், உயர்வோம்.