அறிவுக்கு விலை அதிகம் ( 2 )
சிவாஜி, அந்தப்பணியாளனிடம், ``வாசலில் ஏதோசத்தம் கேட்கிறது,
போய் பார்த்துவா,’’
என்றார்.
இவன் போனவேகத்தில் திரும்பிவந்தான்.
``ராஜா!ஒருயானைபோய்க்கொண்டிருக்கிறது,வேறொன்றுமில்லை,’’என்றான்.
``அது என்ன யானை?’’ என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய்வந்து, ``ஆண்யானை மகராஜ்’’
என்றான். ``அதன் விலை எவ்வளவாம்?’’ என்றதும்,
திரும்பவும் யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன்.
இப்படி
ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்துவர வேண்டியதாயிற்று. சிவாஜி, அடுத்த பணியாளனை அழைத்தார். ``
வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது. என்ன ஏதென்று பார்த்துவா,’’
என்றார்.
அவன் ஓடினான். சற்றுநேரத்தில்
திரும்பிவந்தான். ``மகராஜ்!
அங்கே ஒரு ஆண்யானை போகிறது. அது மிகுந்த லட்சணம்
வாய்ந்தது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடியிருக்கும். விலை ஆயிரம் பொன்பெறும்.’’
என்று விபரமாக எடுத்துரைத்தான்.
சிவாஜி, முதல் பணியாளனை ஒரு பார்வைபார்த்தார். அதன்பிறகு அவன்
அவரிடம் கூலிபற்றி வாய்திறக்கவேயில்லை.
No comments:
Post a Comment