அதிக செலவு
ஆபத்து
*இளைஞர்களின்
எண்ணங்கள் எப்போதும் சிறகுகட்டிப்பறந்து
கொண்டிருக்கும் என்பது இயற்கை. சவால்களைச்சந்திப்பது
அவர்களுக்குச்சந்தோஷம்தரும்.
மூலையில் முடக்கமறுக்கும்
நாளைய கனவுகளை
அடைகாக்கும். இலவசமாகக்கிடைக்கிறவற்றை
எளிதாகச்செலவுசெய்யும்.
பணம் ஏராளமாகக்கிடைக்கிறபோது
தாராளமாகச்செலவு செய்யவிழையும். அதிகமாக
இருக்கிறதுஎன்பதற்காக,அளவில்லாமல்செலவழித்துஆபத்தில் மாட்டிக்கொள்கிறஇளைஞர்களே எதையும் அளவின்றி
உபயோகிக்காதீர்கள்.
காற்றுஇலவசமாகக்கிடைக்கின்றது,
காற்றை மிகவும் சிக்கனமாகச்செலவுசெய்யுங்கள்.
ஆயுளும்,
ஆரோக்கியமும்
நீடிக்கும். நாய் ஒருநிமிடத்திற்கு, ஐம்பதுதடவைசுவாசித்து, பதினான்குவருடங்கள்வாழ்கிறது. குதிரை நிமிடத்திற்கு,
முப்பத்தைந்துதடவைசுவாசித்து,
முப்பதுஆண்டுகாலம் வாழ்கிறது. யானை
நிமிடத்திற்கு, இருபதுமுறைசுவாசித்து, நூறுஆண்டுகள்
வாழ்கிறது. சோம்பேறி என்று நம்மால் வர்ணிக்கப்படுகிற ஆமையானது, நிமிடத்திற்கு
ஐந்துமுறைசுவாசித்து, நானூறுஆண்டுகள் வாழ்கிறது. நிமிடத்திற்குஇரண்டுமுறைமட்டுமே சுவாசிக்கின்ற பாம்பானது,
ஆயிரம்ஆண்டுகள் வாழ்கின்றது.
சிக்கனச்செலவு
அதிகப்பலன் கொடுப்பதை உணர்வோம்,உயர்வோம்.
No comments:
Post a Comment