Monday 31 March 2014

நம்பிக்கை


            
        நம்பிக்கை 
*நம்பிக்கை ஒருசக்திவாய்ந்த ஆயுதம். இதனை   
  சரியாகப்பிரயோகித்தால், உள்ளிருக்கும் சகல
  சக்தியும் ஜ்வாலித்தெழும். அதைப்பயன்படுத்தப்
  பக்குவம்தேவை. தெய்வம் என்பதும் நம்பிக்கைதான்.
  பசித்த வயிற்றில் உணவு தெய்வம்.
  பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்.
  கொட்டும்மழையில் கூரை தெய்வம்.
  கோடைவெயிலில் நிழலே தெய்வம்.
  ஆயாசமும் அசதியும் மிகுந்தகட்டத்தில்,
  சாய்ந்துகொள்ள ஒருதூண், வருத்தமும்,வேதனையும்
  மிகுந்தநேரத்தில், முகம்புதைக்க ஒருமடி ...
  என்றநோக்கில் தெய்வம் எனும் நம்பிக்கை
  வசதியான ஆறுதல். தெய்வம் பார்த்துக்கொள்ளும்
  என்று திண்ணையில்படுத்திருந்தால் தெருவே சிரித்துவிடும்.        
  எது நம்பிக்கையும் ஆறுதலும் தருகின்றதோ                        அதுவேதெய்வம்.
  கடவுள் இல்லை என்ற கொள்கையுடையோரும், சாதனைகள்
   புரிந்ததும், புரிவதும் தன்னம்பிக்கையினால்தான்.

No comments:

Post a Comment

Total Pageviews