இனிமை தந்து, இன்னல் நீக்கும் இனிமா
( Enema - the Easy Way )
* அஜீரணமும், மலச்சிக்கலுமே ஆதிநோய்கள். மற்றதெல்லாம் மீதி நோய்களே. இன்று பல காரணங்களால் ஏற்படும் மலச்சிக்கலே, எல்லா
நோய்களுக்கும் முக்கிய காரணமாகும். ஆனால் எந்த மருத்துத்திலும் மலச்சிக்களை முக்கிய காரணமாகக்கருதி அதற்கு வைத்தியம் செய்து
நீக்குவதில்லை. அப்படி வைத்தியம் செய்வதாக வைத்துக்கொண்டாலும்
அதில் உடனே மலச்சிக்கல் போகாது. ஒருநாளோ, அரைநாளோ ஆகும்.
பேதிகள், மருந்துகள் கொடுப்பது கெடுதல்தான் செய்யும். படுக்கையில்
கிடக்கும் நோயாளிகளுக்கு மிகவும் சுலபமானது இயற்கைமுறை
இனிமாதான். இனிமாவின் இன்னொரு சிறப்பு, ஐந்து நிமிடத்தில் எல்லா
மலமும் கழிந்துவிடுவதுதான். காலையில் இனிமா கொடுத்து மலத்தை
வெளியேற்றிவிட்டால், அன்று முழுவதும் பிரச்சினை இல்லை. நோய்
இல்லாதவரும் இதனை அன்றாடம் செய்யலாம். கோடைகாலத்தில்
அதிகம் உண்டாகும் அடிவயிற்றுச்சூட்டைப்போக்கவும், மூலத்திலும்,
அடிவயிற்றிலுமுள்ள சூட்டைத்தணித்து, தானாக வரமுடியாமல் இருக்கும்
கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றது. எந்தநோய் எனச்சந்தேகம் வந்தாலும்
முதல் உதவியாக எனிமா கொடுத்துவிடலாம். எல்லா நோய்களுக்கும், அஹிம்சைஎனிமா (கடுமையான ஆஸ்த்துமா முதல் புற்றுநோய்வரை அனைத்து நோய்களுக்கும்) முக்கியமான அவசியமான, அடிப்படையான சிகிச்சையாக விளங்குகின்றது.
குழந்தைகள் முதல் முதியோர்கள்வரை அனைவரும்
இதைப்பயன்படுத்திப்பயன்பெறலாம்.
No comments:
Post a Comment