சத்திய விழிகள் - True Eyes
* ஆத்ம சக்தி மையமான மூன்றாம் விழி
மையத்தின் செயல்பாடுகள் அற்புதமானவை. இந்தப்பிறவியில்,
மூன்றாம் விழியின் ஆணைச் சக்கரத்தால் தூண்டப்பட்டவர்களே
தன் உடல், மனம், உணர்வுகளின் எஜமானர்.
மற்றவர்களுக்கு, அவரவர்களின் உடல், மனம், உணர்வுகளே எஜமானர்.
* நமக்கு, அரசியல்,
பொருளாதாரச்சுதந்திரங்கள் பற்றித்தெரியும். ஆனால்,இவை உண்மைச்சுதந்திரங்கள் அல்ல. காரணம்,
மூன்றாம் விழியின் தூண்டுதல் பெறாதவர்கள்,
ஆயிரம் விதங்களில் அடிமைகளாக இருப்பார்கள்.
அந்த மையம்
இல்லாமல் சுதந்திரம் இல்லை.
* ஆத்மசக்தி
இல்லாதவன், மூன்றாம்
விழி அதிர்வு இல்லாதவன், ஏதாவது ஒருவகையில்
அடிமையாகத்தான் வாழ முடியும். அவன் ஏதாவது
ஒன்றில் சுதந்திரம்
பெற்றிருந்தாலும், வேறு ஏதாவது ஒன்றில் அடிமையாகவே இருப்பான்.
தனக்குத்தானே எஜமானனாகும் ஆளுமை ஆற்றல், மனோசத்தி,அவனிடம் இருக்காது.
தன்னைக்கட்டுப்படுத்தவே அவனால் முடியாது. அவனது உடலும்,
உணர்வுகளுமே அவனை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும்.
* ஆத்ம சக்தி மையம்
தூண்டப்பட்டவுடன் உடல், மனம், உணர்வுகள்
கட்டுக்குள்
வந்துவிடுகின்றது. இதுவே மூன்றாம் விழிமையச் சிறப்பாகும்.
No comments:
Post a Comment