அன்பு . . ! |
அன்பு இருக்கிறது என்பதே போதுமானது. அதை ஏன் அளந்து
பார்க்க வேண்டும்? அன்பு இல்லாதபோதுதான், அதை அளந்து
பார்க்கும் எண்ணமே எழுகின்றது. அன்பைக் கவனியுங்கள்;
அளப்பதைக் கைவிடுங்கள்.
* அன்பாக இருங்கள். அன்பு இருந்தால், அது உண்மையான
அன்பாகத்தான் இருக்கும். போலி அன்பு என்று எதுவுமில்லை.
அது ஒரு தவறான சொல். அன்பு உண்டு. அல்லது அன்பு
இல்லை.
அவ்வளவே. சோதனை, அளவுகோல், என்ற
பேச்சுக்கேஇடமில்லை.
* தங்கத்தை அளக்க, சோதிக்க வழிகள் உண்டு. ஏனென்றால்,
தங்கத்தில் கலப்படம் உண்டு. அன்பில் பொய்மை
இல்லை. கலப்படம்
இல்லை. அது இருக்கிறது; அல்லது இல்லை,
என்பதுதான் உண்மை
நிலையாகும். அன்பு இருப்பதை நீங்கள் உணர
முடியும், செருப்புக்
கடிப்பதுபோல! செருப்புக் கடித்தால் எப்படி
வலிக்கிறது! வலிதான்
கடியின் அளவுகோல். அதற்கு வேறு சோதனை
அவசியமில்லை.
* வேதனை அனுபவிக்க சோதனை தேவையா? வேதனையே ஒரு
சோதனைதானே? ஒன்று வலிக்கும். அல்லது வலிக்காமலிருக்கும்.
ஆனால், உள்முகமாகத் திரும்பி நமக்குள்ளே ஊடுருவிப்பார்க்க
நமக்குப்பயம். மற்றவர்களின் அன்பைப் பற்றியதுதான் நம் கவலை.
No comments:
Post a Comment