எளிமை புதுமை முழுமை
Hr.கா.வடிவேலன்
(அறிதுயில் ஆசான்)
நிறுவனர் ஸ்ரீயோகாலயா அறக்கட்டளை
* பேசி :<
98430 16719 – 95855 16719 *
* எனக்கு கிடைக்கவேண்டும் என்பது `ஆசை’ - அது
கிடைக்காமல் எனக்கு வாழ்வு இல்லை என்பது
`லட்சியம்’ – அதற்காக நான் முயற்சி செய்கிறேன்,
அது நிச்சயம் கிடைக்கும் என்பது – `நம்பிக்கை’!
* கடல்
முழுவதும் தண்ணீ ர் இருந்தாலும், அந்நீர்
கப்பலுக்குள் புகாதவரை கப்பல் அமிழ்ந்து போவது
இல்லை. அதேபோலத்தான் பயமும்! மனம் என்கிற
கப்பலுக்குள் சஞ்சலம், பயம், பீதி, திகில், சந்தேகம்
போன்ற
ஓட்டைகள் ஏற்படாதவரை எந்த உலகப்
பிரச்சனைகளும் (உள் – வெளி) நம்மை எதுவும்
செய்ய
இயலாது!
* ``பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்’’ - பாரதி –
பயம் கவலையாய் மாறும்; கவலைப்படுபவர்கள்,
பிறரது கவனத்திற்காக, பாதுகாப்பிற்காக,
அரவணைப்பிற்காக ஏங்குபவர்கள்!
* பயம்,
கோபம், கவலை போன்றவை அதிகம்
உள்ளவர்களுக்கு, அவ்வுணர்ச்சிகளானது, தோல்,
எலும்புகள் மற்றும் தசைகளையும் இறுக்கி
சுவாசத்தையும் தடைபடுத்துகின்றது. கோபம்
அடைகின்றவர்களின் முகம் சிவப்பதோடு
இரைப்பையும் சிவக்கும்; உணர்ச்சி வசப்படும்
போது இரைப்பை சுருங்கி விரியும்; பயம்
கொள்ளும்போது இரைப்பை வெளுத்து விடும்!
* `` ஒவ்வொரு நாளும் எல்லாவகையிலும் நான்
மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே
இருக்கின்றேன். அதனால், நான் இன்னும்
சிறப்படைகின்றேன் !”
(இதனை தினமும் காலை எழுந்ததும், கண்ணாடி
முன் அமர்ந்தவாறு ``10” நிமிடமும், இரவு
உறங்கும் முன்னர் ``10” நிமிடமும் மனத்துள் (அ)
மிதமாக வாய்விட்டோ, குறைந்தது ``21’’ நாட்கள்
கூறிவர , மனதில் – உடலில் உ(ய)ரிய மாற்றம்
நிகழும்!! )
No comments:
Post a Comment